ஜல்லிக்கட்டுக்கு தடை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி:
ல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜல்லிக்கட்டு, கம்பாளா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, பீட்டா சார்பில் சில புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன-

ஆனால்,.இதையடுத்து, பீட்டா அளித்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், புகைப்படங்களை பிரமாணப்பத்திரமாக உரிய முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.