இதனால்தான் விவாகரத்து நடக்கிறது.. சொல்கிறார் பிரபல நடிகை..!

பெண்கள் தற்போது நிதி ரீதியில் சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களிடமிருந்து எதுவும் பெறவில்லை. இதனால்தான் விவாகரத்து நடக்கிறது என்று நடிகை நீனா குப்தா தெரிவித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை நீனா குப்தா (63). இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருடைய மகள் மசாபா குப்தா (33). இவர் மாடலிங் துறையில் உள்ளார். இதனிடையே, மசாபா குப்தா கடந்த 2015-ம் ஆண்டு தொழிலதிபர் மது மண்டினா என்பவரை திருமணம் செய்தார்.

நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதி அதன் பின்னர் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், மசாபா குப்தா தற்போது நடிகர் சத்யதீப் மிஸ்ராவுடன் நெருங்கி பழகி வருகிறார். இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகை நீனா குப்தா நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “தற்போது இளம்பெண்கள் நிதி ரீதியில் சுதந்திரமடைந்துள்ளனர். ஆண்களிடமிருந்து எதுவும் பெறவில்லை.

ஆகையால் தான் விவாகரத்துக்கள் நடக்கின்றன. முந்தைய காலத்தில் அமைதியாக கஷ்டப்படுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், நிறைய வழிகளில் திருமணம் என்பது ஒரு நல்ல அமைப்பு என்று நான் நம்புகிறேன். ஆகையால், எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.