தவறான எண்ணத்தில் தொட்ட நபர்… பாலியல் சீண்டல் செய்தவரை அடித்து வெளுத்த ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. 2017ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், தமிழில் ஜகமே தந்திரம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கேப்டன்உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வனில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாவலில் அட்டகாசமான கதாபாத்திரமாக இருக்கும் பூங்குழலி திரையிலும் அப்படியே கொண்டு வந்திருப்பதாக ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. தொடர்ந்து அவர் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார். மேலும், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார்.

தமிழில் இவர் நடித்து சமீபத்தில் கட்டா குஸ்தி படம் வெளியானத். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக தோன்றிய ஐஸ்வர்யா லட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. மேலும்,நகைச்சுவை படமான இதில் அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

கட்டா குஸ்தி குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்ம் “இதுவரை எந்த நகைச்சுவை படத்திலும் நான் நடித்ததில்லை. நகைச்சுவை படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. கட்டா குஸ்தி திரைப்படம் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சமீப காலமாக நகைச்சுவை படங்கள் வெளியாவதில்லை.

உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் ஈஸியாக நடித்துவிடுவேன். இதுபோன்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு ரொம்பவே கஷ்டம். குஸ்தி வீராங்கனையாக நடித்தது தனக்கு பெரும் சவாலாக இருந்தது.

ஏற்கனவே நான் ஒரு நபரை அடித்திருக்கிறேன். அந்த நபர் என்னை தவறான எண்ணத்தில் தொட்டார். அதனால் அந்த நபரை அடித்தேன். ஆனால், சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.