சென்னையில் கர்ப்பிணி பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீராம் (22) கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீராம் எதிர் வீட்டில் வசிக்கும் 24 வயதுடைய கர்ப்பிணி பெண் குளிப்பதை ரகசியமாக மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நண்பர்களை வரவழைத்த அவர், ஸ்ரீராமிடம் இது பற்றி கேட்டபோது ஏதும் தெரியாது போல் இருந்துள்ளார்.
ஆனால் அவரிடம் தகராறில் ஈடுபட்ட இளம் பெண்ணின் கணவரும் அவரது நண்பர்களும் ஸ்ரீராமை பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஸ்ரீராமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.