பனியால் அதிகரிக்கும் ரயில் விபத்துகள்.. வேகத்தை குறைக்க அறிவுறுத்தல்!

மூடுபனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளை மற்றும் அதிகாலையில் காணப்படும் மூடுபனியின்போது ரயில் விபத்துகள் அதிகம் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து, பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பனி படர்வை நீக்கும் கருவிகளை ரெயில் இஞ்சின்களில் பொருத்துவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, தண்டவாளங்களுக்கு அருகில் வெள்ளை நிற கோடுகளை போடுவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் ரெயில்களை 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.