மாண்டஸ் எச்சரிக்கை: சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: மாண்டஸ் [புயல் எச்சரிக்கை எதிரொலியாக,  சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. இந்த புயலால் சூறாவளி காற்றும் வீசும் என்பதால்,  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர்,காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.