வனவிலங்கு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

புதுடெல்லி: வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட்டது. வன விலங்கு(பாதுகாப்பு) திருத்த மசோதா 2021, கடந்த ஆண்டு  டிச.17ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு  டிச. 25ம் தேதி  அலுவல் ஆய்வு குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சிறப்பான முறையில் மேலாண்மை செய்யவும், கால்நடைகள் மேய்ச்சல், உள்ளூர் சமுதாயத்தினருக்கு குடிநீர் எடுப்பது போன்றவற்றுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு  விஷயங்கள்  இடம் பெற்றுள்ளன. கடந்த ஆகஸ்டில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.