கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அருகே சாந்தமங்கலம் எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் ஆரோக்கியதாஸ் என்பவருக்கு அலெக்ஸ் என்ற 21 வயது மகன் இருந்துள்ளார். ஐடிஐ படித்துள்ள இவர் செங்கல்பட்டு மறைமலை நகரில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு அதே நிறுவனத்தில் பணி புரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின் (வயது 20) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் செய்ய போன இடத்தில் உயிரை விட்ட காதல் ஜோடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.