நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசம்!

இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன் என்று நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார். அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது, என்ன காரணங்களுக்காக இந்தியா வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அண்மையில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போர்க்கப்பல் வந்ததை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவின் நலனை காக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று வைகோ கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாம் வாக்களிக்காததற்கான காரணத்தை கூறினார்.

 

இது இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு என்று, முந்தைய அரசாங்கங்களும் இதையே செய்தது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சமூகம், சிங்கள சமூகம் மற்றும் ஏனைய சமூகங்களை உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம் என்று ஜெய்சங்கர் கூறினார்.

கடுமையான பொருளாதார சூழ்நிலையில் இலங்கைக்கு நாம் உதவ முன்வரவில்லை என்றால், நாம் நமது பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டது போலாகிவிடும் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.