பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை ஆண்கள் எப்போ தெரிந்து கொள்வார்களோ..?

உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அன்வர். இவர் மனைவி ருக்‌ஷர் (வயது 30). 9 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன. அம்ரொஹாவில் குடும்பத்துடன் வசித்துவரும் அன்வர் வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். உறவுக்கு பின்னர் ருக்‌ஷர் உறங்கியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் உறவுக்கு வருமாறு ருக்‌ஷரை அன்வர் அழைத்துள்ளார். அதற்கு ருக்‌ஷர் முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அன்வர் தனது மனைவி ருக்‌ஷரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன் பின் அடையாளம் தெரியக்கூடாது என நினைத்த அன்வர் கொலை செய்த தனது மனைவி ருக்‌ஷரின் தலை முடியை வெட்டியுள்ளார். பின்னர், உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டிய அன்வர் அதை அதிகாலை தனது கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலையில் உள்ள ரதுபுரா என்ற கிராமத்தில் சென்று வீசியுள்ளார். பின்னர், காலை தனது மனைவியை காணவில்லை என்று அன்வர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது ரதுபுரா கிராமத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த பெண் அன்வரின் மனைவி ருக்‌ஷர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் அன்வரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் ஒரே இரவில் இரு முறை உறவுக்கு வர மறுத்ததால் மனைவி ருக்‌ஷரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அன்வர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த கொலைக்கு அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மனைவியை கொலை செய்த அன்வர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் டேனிஷை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.