ஆளுநரின் வேந்தர் பதவிக்கு வேட்டு… சட்டசபையில் அதிரடி காட்டிய கேரள அரசு!

மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வரும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்கு பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு மாநில அரசால் நியமிக்கப்படும் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுதான் பனிப்போருக்கு முக்கிய காரணம்.

இதனையடுத்து துணேவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க வகைச் செய்யும் சட்ட மசோதா இரண்டு மாதங்களுக்கு முன் கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆரிப் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

இதனையடுத்து பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகைச் செய்யும் அவசர சட்டம் கொண்டு வர அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க வகை செய்யும் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா கேரள மாநில சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

vv

நீண்ட விவாதத்துக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக பதவி வகிக்கும் ஆளுநரை அந்த பதவியில் இருந்து மாற்றிவிட்டு, சிறந்த கல்வியாளர்களை அப்பதவிக்கு நியமிக்க இந்த சட்டமசோதா வழிவகை செய்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.