விவசாயத்துக்கு தனி பட்ஜெட்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தில் பொது பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படும்போதும், அதனுடன் விவசாய துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை பின்பற்றி, நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது. இதற்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளது.

அதில், ” விவசாயத் துறைக்கென நாடாளுமன்றத்தில் தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் திட்டம் ஏதும் இல்லை எனவும், ஆனால் அதேசமயம் 2022 -23 நிதியாண்டில் விவசாயத்துககான நிதி ஒதுக்கீடு 379% அதிகரிக்கப்பட்டுள்ளது”என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது நடப்பு நிதியாண்டில் விவசாயத்துக்கு 1.32 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்து வந்தது. இந்த நடைமுறை மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதும் கைவிடப்பட்டது. மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதில் இருந்தே மத்திய பொது பட்ஜெட்டின் ஒரு அங்கமாகவே ரயில்வே துறைக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.