சாலையில் நடந்து சென்ற 17 வயது பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த 2 பேர் ஆசிட் வீச்சு..!

டெல்லி த்வார்கா அருகே, சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த 17 வயது பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த 2 பேர் ஆசிட் வீசியதில், மாணவியின் முகம் மற்றும் கண்களில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாணவிக்கு, 8 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவி மீது ஆசிட் வீசிய 2 பேரில், ஒருவனை கைது செய்துள்ளதாகவும், மற்றொருவனை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான காட்சிகளை தனது சமூக வலை தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், இதுபோன்ற கொடூரமான குற்றங்களை தடுக்க, ஆசிட் விற்பனையை ஏன் கட்டுப்படுத்த கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.