டிடிஎஃப் வாசனை காண குவிந்த இளையோர் – தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் பைக்கர் டிடிஎப் வாசனை காண ஏராளமான இளைஞர்கள் திரண்டதால், தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

திரு.வி.க பூங்கா பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தை திறந்து வைக்க வந்த கோவை பைக்கர் டிடிஎப் வாசனை காண, அவரது ஃபாலோயர்களான இளையோர், ஒரே இடத்தில் கட்டுக்கடங்காமல் திரண்டனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, தள்ளு-முள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து, தடியடி நடத்தி, போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தியதோடு, விதிகளை மீறியதாக டிடிஎப் வாசன் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு அபராதமும் விதித்தனர்.

இந்நிலையில், டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இயக்குனர் செந்தில் செல்வம் மற்றும் விக்னேஷ் மீது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.