டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும் நாளை காளிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அது இலங்கையை ஒட்டி தமிழக மாவட்டங்களின் கரையை கடக்கும் எனவும் கரையை கடந்த பின்னர் உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடல் செல்லும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.