நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு… இடைத்தரகர்கள் 3 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்..!

2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர்கள் என 18 பேரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைதுசெய்தனர்.

இந்நிலையில், இடைத்தரகர்களாக செயல்பட்ட கிருஷ்ணா முகாரி, ரகுவன்ஸ் மணி மற்றும் சாகத் குமார் ஷிங்கா ஆகிய 3 பேரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.