மூச்சுத் திணறி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி| Dinamalar

பால்கர்:மஹாராஷ்டிராவில், பால்கர் மாவட்டத்தில், வடா தொழிற்பேட்டை பகுதியில் ரசாயனப்பொருள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இதில், நேற்று முன் தினம் இரவு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களில் ஒருவர், பராமரிப்புப் பணிக்காக ரசாயன கலவைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு விஷவாயு கிளம்பிய நிலையில், அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்கச் சென்ற மற்றொரு தொழிலாளியும் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே, மற்ற தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.