ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுடன் ‘தலைநகரம் 2’ டீசர் – வடிவேலு மிஸ்ஸிங்!

இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைநகரம் 2’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லாலின் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அபிமன்யு’ படம், தமிழில் ‘தலைநகரம்’ என்றப் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இயக்குநர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமானார். ஜோதிர் மயி, பிரகாஷ் ராஜ், வடிவேலு, போஸ் வெங்கட், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப்பெற்றது. குறிப்பாக வடிவேலுவின், ‘நானும் ரௌடிதான்’, ‘த்ரிஷா இல்லனா திவ்யா’, ‘நாய் சேகர்’ உள்ளிட்ட காமெடி வசனங்கள் படத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்திருந்தன.

image

இதனைத் தொடர்ந்து ‘நகரம்’ என்றப் படத்தை சுந்தர் சி இயக்கி நடித்திருந்த நிலையில், தற்போது வி. இசட். துரை இயக்கத்தில் ‘தலைநகரம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ரத்தம் தெறிக்கும் காட்சிகளுடன் வன்முறை சம்பவங்கள் கொண்ட படமாக இருப்பதுபோல் இருக்கிறது.

தலைநகர் 2-இல் வடிவேலு இல்லாததை ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.