அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெறும் 28வது சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோளை வைத்துள்ளார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அமிதாப்பச்சனுக்கு வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு சார்பாக இல்லாமல் மேற்கு வங்க மக்கள் சார்பாக மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையை வைப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், சத்ருகன் சின்ஹா, ஷாருக்கான், ராணி முகர்ஜி தவிர கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திரைப்பட சான்றிதழ் வாரியம் இன்றளவும் கடைப்பிடித்து வரும் தணிக்கை விதிகள், சினிமாட்டோகிராஃப் சட்டம் 1952ல் உருவாக்கப்பட்டது. “ஆனால் இப்போதும் கூட, சிவில் உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் பற்றிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன.” என்று நிகழ்ச்சியில் பேசிய அமிதாப்பச்சன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.