வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து பல கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் பெறப்பட்டு வந்தது. அந்த வகையில் ஒப்பந்தத்தின்படி கடைசி மற்றும் 36வது ரபேல் விமானம் இந்தியா வந்து சேர்ந்தது.
பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ என்ற நிறுவனத்தில் 56 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. கடந்த 2020 ஜூலையில் முதற்கட்டமாக 10 விமானங்கள் இந்தியா வந்தன. அவை, இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. அடுத்து பல கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுவரை மொத்தம் உள்ள 36 போர் விமானங்களில் 35 இந்தியாவிற்கு வந்துள்ளன. 36வது மற்றும் கடைசி ரபேல் விமானம் இன்று (டிச.,15) இந்தியா வந்து சேர்ந்தது. இதனை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட விமானங்கள் ரபேல் விமானங்கள் RB குறியீட்டுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் RB என்பது இந்திய விமானப்படையின் துணைத் தலைவர், மற்றும் முன்னாள் இந்திய விமானப்படை (IAF) தலைமை ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதவுரியாவின் பெயரை குறிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement