சிறையிலிருந்து போரிஸ் பெக்கர் விடுதலை| Dinamalar

லண்டன்: வரி ஏய்ப்பு புகார் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் நேற்று சிறையிலிருந்து விடுதலையானார்.

ஜெர்மனி முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், 54 முன்னாள் நம்பர் -1 வீரர், கிராண்டஸ்லாம், அரங்கில் 6 கோப்பை வென்றவர் 2002-ல் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.

தனது சொத்துக்களை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது.

வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் 2017-ல் தான் திவால் ஆனதாக அறிவித்தார். திவால் வழக்கு என்பதால் தண்டனை காலம் குறைக்கப்பட்டதால், சில மாதங்கள் பெக்கர் சிறையில் இருக்க நேர்ந்து. இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலையானதும் தனது தாய்நாடான ஜெர்மன் சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.