நாட்டில் பணவீக்கம் மேலும் குறையும் -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் அதுமேலும் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் குறித்த மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் அரிசி, கோதுமை, பருப்பு சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின்  விலைவாசி உயராமல் இருக்க தொடர்ந்து அரசு அமைச்சர்களின் குழுவை அமைத்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.

வாரந்தோறும் அடிப்படை பொருட்களின் விலை ஏற்ற நிலைமைகள் ஆராயப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசை பணவீக்கம் தொடர்பாக தாக்கி வரும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த பணவீக்கத்தையும் நிர்மலா சீதாராமன் ஒப்பிட்டு பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.