புலி கடித்து பெண் பலி | Dinamalar

சந்திராபூர்:மஹாராஷ்டிராவில் புலி தாக்கியதில், 50 வயது பெண் பலியானார்.

மஹாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று கிராமத்துக்குள் புகுந்து, மக்களை தாக்கி வருகிறது.

இங்கு காதி கிராமம் பகுதியில் உள்ள பருத்தித் தோட்டத்தில் நேற்று புகுந்த இந்தப் புலி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஸ்வரூபா, 50, என்ற பெண்ணை தாக்கி கொன்றது.

தப்பி ஓடிய புலியை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சந்திராபூர் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும், புலி மற்றும் சிறுத்தைகளால் தாக்குதலுக்கு ஆளாகி 50 பேர் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.