கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 25 பேர், பொதுமக்கள் 15 பேர் என 40 பேர் நேற்று காலை காமாட்சிபுரம் கிராமத்தில் இருந்து பந்தநல்லூருக்கு நடந்து சென்றனர். வழியில் உள்ள குடோன் அருகே கூடு கட்டி இருந்த விஷ வண்டுகள் திடீரென அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் படுகாயமடைந்த அனைவரும் வலியால் துடித்தனர். அப்பகுதிமக்கள், அவர்களை மீட்டு கோணுளாம்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின்னர், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
