“பாகிஸ்தான் அமைச்சரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.2 கோடி" – பாஜக நிர்வாகி சர்ச்சைப் பேச்சு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வியாழன் அன்று, “எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்தக்கூடாது. ஏனெனில் உலகம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுகிறது. அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் விருந்தோம்பல் செய்தது” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பூட்டோ, “ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார் என்பதை நான் இந்தியாவிடம் கூற விரும்புகிறேன். ஆனால் குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார், அவர் இந்தியாவின் பிரதமர்” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பூட்டோவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க அவருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. நாடு முழுவதும், பா.ஜ.க தொண்டர்கள் பூட்டோவின் உருவ பொம்மைகளை எரித்து, பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.

மனுபால் பன்சால்

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில, பா.ஜ.க கிசான் மோர்ச்சா தலைவரும், பாக்பத் ஜிலா பஞ்சாயத்து உறுப்பினருமான மனுபால் பன்சால், “பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை துண்டிப்பவருக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்குகிறேன். நாங்கள் மிகவும் மதிக்கும் பிரதமரைப் பற்றி இப்படிச் சொல்வதை, எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் பிரதமருடன் எங்களுக்கு அளப்பரிய தொடர்பு இருக்கிறது. இந்தப் பரிசுத் தொகையை நான் தனிப்பட்ட முறையில் அறிவித்திருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.