இமாச்சலப் பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா..!!

கடந்த 11ந் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்திக்க சுக்விந்தர் சிங் திட்டமிட்டிருந்தார். இதையொட்டி அவருக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரதமரை சந்திக்கும் திட்டத்தை தள்ளி வைத்த அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.