தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

நிதி ஒதுக்கி, சங்க கால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும்வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஸ்டாலின் என்பவர் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், உலக தமிழ்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தமிழ் மொழியை வளர்க்க தேவையான நிதியை ஒதுக்கி, சங்க கால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.