நாகர்கோவிலில் கோயில்நகைகள் தயாரிப்பு பணி இரவு, பகலாக தீவிரம்: அமெரிக்கா ,சிங்கப்பூர் என வெளிநாடுகளில் இருந்து குவியும் ஆர்டர்..!!

கன்னியாகுமரி: வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில்நகைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். கோயில் நகைகளுக்கு பிரசித்திபெற்ற ஊராக திகழ்கிறது நாகர்கோவிலில் உள்ள வடசேரி, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆர்டரின் பெயரில் கோயில் நகைகள் தயார் செய்து கொடுக்கப்படுகின்றன. ஏராளமான தொழிலாளர்கள் நகைசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கொரோனாவால் பலர் மாற்று தொழிலை நாடி சென்றுவிட்டனர்.

கொரோனா காலத்தில் குறைந்த ஆர்டர்களே வந்த நிலையில், தற்போது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கோயில் நகை செய்வதற்கான ஆர்டர்கள் குவிந்துவருகின்றன. இதனால் குறைவான தொழிலாளர்களே இரவு பகலாக செய்துவருகின்றனர். கொரோனா காலத்தில் முடங்கிக்கிடந்த கோயில் நகைகள் சேய்யும் தொழில் வடசேரியில் தற்போது வேகமெடுத்துள்ளது. ஆர்டர்கள் கொடுத்தவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் நகைகளை வழங்கவும் தொழிலாளர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.