விருதுநகர்: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தை சேர்ந்த 28 பேரிடம் மொத்தம் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு ரயில்வே துணை இயக்குனர் என்று கூறி விகாஸ் ராணா என்பவர் தலா ரூ.2 லட்சம் முதல் 24 லட்சம் வரை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். விருதுநகரை சேர்ந்த சுப்புசாமி என்பவர் வேலை தேடுபவர்களுக்கும், மோசடி செய்த விகாஸ் ராணாவுக்கு பாலமாக இருந்துள்ளார். பணம் கொடுத்து ஏமார்ந்து 28 பெரும் பொறியியல் மற்றும் இதர தொழில்நுட்ப கல்வி பயின்றவர்கள் என சுப்புசாமி தெரிவித்துள்ளார்.