தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (டிசம்பர் 21ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை
திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி
கம்பரசம்பேட்டை மற்றும் உறையூர் துணைமின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை
திருப்பாலை, இலந்தைகுளம் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.