மலையாள நடிகர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

திருவனந்தபுரம்: மலை யாள நடிகர் உல்லாஸ் பந்தளம் மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மலையாளத்தில் டி.வி தொடர்கள் மற்றும் சினிமாவில் காமெடி வேடத்தில் நடிப்பவர், உல்லாஸ் பந்தளம். அவரது மனைவி ஆஷா. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். உல்லாஸ் பந்தளம் தனது குடும்பத்துடன் பத்தனம் திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ஆஷாவை காணவில்லை என்று அடூர் போலீசாரிடம் புகார் செய்தார்.

உடனே போலீசார் ஆஷாவை தேடினர். இதற்கிடையே, வீட்டின் முதல் மாடியிலுள்ள படுக்கை அறையில் ஆஷா தூக்கு போட்டு இறந்த நிலை யில் காணப்பட்டார்.இதை தொடர்ந்து போலீசார் ஆஷாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆஷாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.