சென்னை; வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென் மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு கிழக்கு-வடகிழக்கே 600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
