சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, வரும் வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் சென்னையில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.