காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த நடிகர் விஜயின் தாயார்! என்ன வேண்டுதல் தெரியுமா?

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இளைய தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்றைய தினம் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த பின்னர் கோவில் நிர்வாகம் அளித்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு ஷோபா சந்திரசேகர் சென்னைக்கு திரும்பி சென்றார்.

Varisu Audio Launch: இது எப்படி இருக்கு தெரியுமா.?: விஜய்யை பங்கமாய் கலாய்த்த சீமான்.!

பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகைக்கு, அஜித்தின் துணிவு திரைப்படமும், லிஜயின் வாரிசும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது. இதனால் தல, தளபதி ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். பொங்கலுக்கு ரிலீசாகும் தமிழ் சினிமாவின் இரண்டு நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களும் வெற்றஇ பெற வேண்டி, அஜித், விஜய் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்கெனவே சிறப்பு பூஜை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயின் தாயார் ஷோபா, தமது மகன் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ள வாரிசு படம் வெற்றிபெற வேண்டி, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.