தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும், தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்குமாறும் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் முகக்கவசத்தை கட்டாயமாக்குவதோடு, தடுப்பூசி மையங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்95 முகக்கவசம், பிபிஇ கிட்களை போதிய அளவு இருப்பு வைப்பதோடு, கொரோனா வார்டுகளில் உருவாக்கப்பட்ட கூடுதல் படுக்கைகளின் நிலையையும் ஆய்வு செய்ய வேண்டுமெனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.