சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் – ஆசிரியர்களுக்கு ரூ.3000 மிகை ஊதியம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.1000 மிகை ஊதியம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.