கொள்ளிடம் கரையில் உழவுத்தொழில் செய்ய அனுமதி மறுப்பு: பட்டியல் பிரிவு மக்கள் மீது பொய் வழக்குகள் பதிவதாகப் புகார்..!!

சீர்காழி: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப்படுக்கையில் விவசாயம் செய்யும் பட்டியல் பிரிவு மக்கள் மீது பொய் வழக்குகளை பதிவுசெய்து மிரட்டும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது காடுவெட்டி கிராமம் இங்கு 100க்கும் மேற்ப்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் கடந்த நூற்றாண்டாக வசித்துவருகின்றனர். இவர்கள் ஆற்றுப்படுகையில் உள்ள சுமார் 400 ஏக்கரில் பல ஆண்டுகளாக உழவு தொழில் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் அரசுக்கு வரி செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் செய்ய அனுமதியளிக்காத வனத்துறையினர். பட்டியல் பிரிவு மக்களை மிரட்டி பொய் வழக்குகளை பதிவுசெய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக ஆற்று படுக்கையில் உழவுத்தொழில் செய்துவரும் தங்களுக்கு வனத்துறையிடம் இருந்து நிலத்தை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் மீது பொய் வழக்கு பதியும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பட்டியல் பிரிவு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.