திண்டுக்கல்: ​சொகுசு காரில் கஞ்சா ​கடத்தல்; 3 பெண்கள் உட்பட 5 பேர் ​சிக்கியது எப்படி?!

​திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில்​ ​கஞ்சா ​விற்பனை அதிகமாக நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவு போ​லீஸார் ​​நிலக்கோட்டை​, ​வத்தலக்குண்டு பகுதி​களில் தீவிர சோதனை​யில் ஈடுபட்டு வந்தனர்​.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இதில் வத்தலகுண்டு பகுதிக்கு ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தி வந்த கார் பட்டிவீரன்பட்டி பகுதியில் இருப்பது தெரியவந்து​ள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதில்​ பட்டிவீரன்பட்டி அய்யங்கோட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டின் முன்பு ​சந்தேகத்திற்குரிய வகையில் ​மூடி வைக்கப்பட்டிருந்த சொகுசு கா​ரையும் போலீஸார் சோதனை செய்த​னர். அப்போது அந்த காரில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது​.

கஞ்சா மூடைகள் மற்றும் காரைப் பறிமுதல் செய்த போலீஸார், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அதேபகுதியை​ச்​ சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சக்சேனா ஆகிய​ ​இருவரையும் பிடித்த​னர். மேலும் கஞ்சா காரில் பதுக்கியதில் தொடர்புடைய மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை​ச்​ சேர்ந்த தனலட்சுமி, ராஜாத்தி, நாக பாண்டி ஆகிய மூன்று பெண்களையும் போலீ​ஸா​ர் ​பிடித்து விசாரணை மேற்கொண்டனர்​.

கைதானவர்கள்

​போலீஸார் விசாரணையில்​, 3 பெண்கள் உள்பட 5 பேரும் காரில் கஞ்சாவை கடத்தி வந்து அதனை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட முயன்​றுள்ளனர். மேலும்​​​ போலீ​ஸாரிடம் சி​​க்காமல் இருக்க சொகுசு காரை பல இடங்களுக்கு மாற்றி​யுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ​5​ பேரும் மீதும் வழக்கு​ப்​பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீ​ஸா​ர்​,​ 60 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார்​, டூவிலரை பறிமுதல் செய்தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.