திருப்பூர்: திருமணம் செய்து கொள்ள கூறிய காதலி; பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த காதலன் – அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா (19). பெற்றோர் இறந்துவிட்டதால், மாமாவின் வீட்டில் இருந்து அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவந்தார் பூஜா. அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பவரும், பூஜாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக பூஜாவுடன் பேசுவதை லோகேஸ்வரன் தவிர்த்து வந்துள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு லோகேஸ்வரனை பூஜா வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், பூஜாவை கொலை செய்யத் திட்டமிட்ட லோகேஸ்வரன், பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் பனப்பாளையம் பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்கு அவரை புதன்கிழமை மாலை கூட்டிச் சென்றுள்ளார். அங்கு வைத்து பூஜாவின் தலையில் கல்லால் அடித்துள்ளார்.

காதல் வன்முறை

இதில், மயக்கமடைந்த பூஜா மீது ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி லோகேஸ்வரன் தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றிய நிலையில் அலறியபடி, தட்டம்பாளையம் சாலையில் ஓடிய பூஜாவை, அவ்வழியே வந்த பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பூஜை அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.