நீர் பாதுகாப்பில் அரசு முயற்சிகள் மட்டும் போதாது; மக்கள் பங்களிப்பு அவசியம்: பிரதமர் மோடி

“தண்ணீர் பாதுகாப்பில் அரசின் முயற்சிகள் மட்டும் போதாது; பொது மக்களின் பங்களிப்பு அவசியம்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், அனைத்து மாநிலங்களின் நீர்வளத் துறை அமைச்சர்கள் மாநாடு முதன் முறையாக இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நீர்நிலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால், வேளாண் துறை வேகமாக வளர்ச்சி பெறும். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுடன் பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்களை நீர் சேமிப்பு துறையில் பயன்படுத்த வேண்டும். இதில்,

ஏராளமான ஸ்டார்ட் அப்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

தண்ணீர் பாதுகாப்பிற்கு அரசின் முயற்சிகள் மட்டும் போதாது. மக்களுடன் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் இணைத்து செயல்பட வேண்டும். நீர் பாதுகாப்பு தொடர்பான பிரசாரங்களில் முடிந்வரை மக்கள், சமூக அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும். மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

தொழில் மற்றும் விவசாயம் என்பது தண்ணீர் தேவைப்படும் இரண்டு துறைகள். ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான முக்கிய வளர்ச்சி அளவுகோலாக மாறி உள்ளது. நமது அரசியல் அமைப்பு அமைப்பில், தண்ணீர் பொருள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் கீழ் வருகிறது. நீர் பாதுகாப்பிற்கான மாநிலங்களின் முயற்சிகள் நாட்டின் கூட்டு இலக்குகளை அடைவதில் நீண்ட தூரம் செல்லும்.

நீர் பாதுகாப்பில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2047 ஆம் ஆண்டிற்கான அமிர்த கால் திட்டத்திற்கு இது பெரும் பங்களிப்பாக இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த சரோவர்களை உருவாக்க நாடு ஒன்றிணைந்து செயல்படுகிறது. இதுவரை 25 ஆயிரம் அமிர்த சரோவர் கட்டப்பட்டு உள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.