மதுரை: ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நோட்டீஸ் தந்து அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை பின்பற்றாதது ஏன்? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரி ஆஜராகி விளக்கம் தர ஆணையிடப்பட்டது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வேடசந்தூர் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாலமூர்த்தி என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.