குறவன், குறத்தி நடன நிகழ்ச்சிக்கு தடை.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “இணையதளத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் என தேடும் பொழுது ஆபாச நடனங்கள் வருகிறது. எனவே இணையதளத்தில் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்க வேண்டும். குறவன் குறத்தி பெயரில் உள்ள ஆபாச நடனங்களை பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொழுது “ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆட அனுமதிக்க கூடாது. குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடினால் புகார் அளிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பழங்குடியினரை அடையாளப்படுத்தும் நடனங்கள் எதுவும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதே போன்று குறவன் குறத்தி பாடலில் ஆபாச நடனம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இத்தகைய சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவு படுத்துவது சிறுமைப்படுத்துவது நடக்கக்கூடாது” என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.