பிரதமரின் அழைப்பையேற்று சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வோம் – ஊருவரிகே வன்னியலே அத்தோ தெரிவிப்பு

75வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி சார்பில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் உள்ள சகல ஆதி வாசிகள் தலைவர்களுடன் இந்தத் தேசிய நிகழ்வில் கலந்துகொள்வதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ 2023.01.17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தபோது தெரிவித்தார்.

இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தன்னைச் சந்தித்த ஆதிவாசிகள் தலைவரிடம் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.