எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி… ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!

கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே தற்போது வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கப்பட்டு வருகின்றது.

இந்த ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 04, 11, 18, 25 ஆகிய சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி -எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பிப்ரவரி 05, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 06.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜனவரி 20 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு துவங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.