கேசிஆரின் எதிர்கட்சிகள் மாநாடு; பீகார் முதல்வர் பரபரப்பு கருத்து.!

கடந்த ஆண்டு செப்டம்பரில் சந்திரசேகர ராவை சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மூன்றாம் அணி இருக்காது என்று திட்டவட்டமாக கூறினார். “மூன்றாம் முன்னணி என்ற கேள்விக்கு இடமில்லை. காங்கிரசை உள்ளடக்கிய ஒரு முன்னணி இருக்க வேண்டும். அதன் பிறகு 2024-ல் பாஜகவை வீழ்த்தலாம்” என்று இந்திய தேசிய லோக்தளம் ஏற்பாடு செய்த பேரணியில் நிதிஷ்குமார் கூறினார்.

இந்தநிலையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்குவதற்கான முதல் படியை நேற்று தனது கட்சியின் முதல் கூட்டத்தின் மூலம் தேசியமயமாக்கினார். ஹைதராபாத்தில் உள்ள கம்மம் நகரில் நேற்று நடைபெற்ற பாரதிய ராஷ்டிர சமிதியின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர், சிபிஎம் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர்
அகிலேஷ் யாதவ்
, சிபிஐயின் டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அரசியலில் கேசிஆர் முன்னேறுவதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்டி குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை (மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம்) மேற்கொண்டு வருவதால் அவர் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறியுள்ளார்.

நான்கு முதல்வர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்ட உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: “நேற்று பா.ஜ.க.வின் (தேசிய நிர்வாகி) கூட்டம் முடிந்தது. இன்னும் 400 நாட்கள் எஞ்சியிருப்பதாக அவர்களே கூறினர். இந்த அரசு தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. 400 நாட்களுக்குப் பிறகு அது நிலைக்காது’’ எனறு அவர் கூறினார்.

கேசிஆர் தலைமையில் எதிர்கட்சிகளின் மாநாடு நேற்று நடைபெற்ற நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ளாதது பற்றி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘மாநாடு குறித்து எனக்கு தெரிவிக்கவில்லை. அழைப்பு இல்லை. அழைக்கப்பட்டவர்கள் மற்றும் சென்றுள்ளனர். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் மாநாடு குறித்து தெரியவில்லை.

என் கழுத்தை அறுத்தாலும் செல்ல மாட்டேன்; ஆர்எஸ்எஸ்ஸை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.!

எதிர்கட்சிகளின் ஒற்றுமையைத் தான் நான் பலமுறை கூறிவருகிறேன். மூன்றாவது கூட்டணி உருவானால் அது ஆளும் பாஜகவிற்கு சாதகமான பலன்களை கொடுக்கும். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகிற மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுதான் நாட்டிற்கு நலனை தரும்’’ என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.