திருச்செங்கோடு தினசரி அங்காடியில் பட்டாணியை பச்சை நிற சாயத்தில் ஊறவைத்து விற்பனை செய்தது அம்பலம்.!

திருச்செங்கோடு தினசரி அங்காடியில், பச்சை நிற சாயத்தில் ஊற வைத்து விற்கப்பட்ட பட்டாணிகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட போது கடைகளில், காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊறவைத்து, அதை பச்சை நிற சாயத்தில் போட்டு, பச்சை பட்டாணி போன்று விற்கப்படுவது தெரியவந்தது.

ஒரு கிலோ பச்சை பட்டாணி 50 முதல் 80 ரூபாய் வரை தோலுடன் விற்கப்படுவதால், பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த பட்டாணியை குறைந்த விலைக்கு விற்பதும் தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.