விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; ஏர் இந்தியாவிற்கு 30 லட்சம் அபராதம்.!

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் விமான பணியாளர்களிடம் தனது உடைகள், காலணிகள் மற்றும் பைகள் சிறுநீரில் நனைந்திருப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த செருப்புகள் மற்றும் உடைகளை பெற்றுக் கொண்டு, வேறு இருக்கை கிடைக்கவில்லை எனக் கூறி, அதே இருக்கைக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, அந்த ஆண் பயணி தனது மோசமான நடத்தைக்காக எந்த நடவடிக்கையும் எதிர்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை விமான நிறுவனம் கையாள்வதில் ஏமாற்றம் அடைந்த அந்த பெண், “நான் இதுவரை அனுபவித்திராத மிகவும் அதிர்ச்சிகரமான விமானம்” என்று விவரித்து, ஏர் இந்தியாவின் குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு மறுநாள் கடிதம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து இது குறித்த விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா, 34, என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த ஷங்கா மிஸ்ராவை அண்மையில் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 6 வாரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி ஷங்கர் மிஸ்ரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஷங்கர் மிஸ்ரா, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் பறக்க நான்கு மாதங்கள் தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. விமானத்தில் பறக்க ஒரு மாதம் விதிக்கப்பட்டு இருந்த தடை தற்போது 4 மாதங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் நியூயார்க்-டெல்லி விமானத்தின் பொறுப்பாளரின் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் இடைநீக்கம் செய்துள்ளார்.

கேசிஆரின் எதிர்கட்சிகள் மாநாடு; பீகார் முதல்வர் பரபரப்பு கருத்து.!

மேலும், தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக, ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.