ஊராட்சி மன்றத்தலைவரின் கார் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனூர் ஊராட்சி மன்றத்தலைவரின் கார் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதனூர் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த தமிழ் அமுதன் புதிதாக மூன்று கார்களை வாங்கி தன் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மர்ம நபர்கள் புதிய கார் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த நிலையில், சிசிடிவியில் கார் எரிவதை பார்த்த ஊராட்சி மன்றத்தலைவர், உடனே வெளியில் வந்து மற்ற இரண்டு கார்களை பாதுகாப்பாக நகர்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.