உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே முற்றும் போர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பு விழாவைக் கூட பிரதமர் நரேந்திரமோடி புறக்கணித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தலைமை நீதிபதி பதவி ஏற்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கடந்த கடந்த நவம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் கூறி, இது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என விமர்சித்தார். அவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகள் இருப்பதில்லை என்றும் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும், நீதி அமைப்பு பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தார். இந்தநிலையில் நாட்டின் நீதி அமைப்பை ஆளும் பாஜக கைப்பற்ற துடிப்பதாக காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கபில்சிபல் தெரிவித்தார். இது குறித்து ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல் கூறும்போது, ‘‘அரசாங்கம் நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது.

சட்ட அமைச்சருக்கு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் பற்றி அவருக்குத் தெரியாது என்று நான் முன்பே கூறியுள்ளேன். அது போல அனைத்து நிறுவனங்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் கடைசி கோட்டை நீதித்துறை. உயர் நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமனம் குறித்த இறுதி வார்த்தை அரசாங்கத்திடம் விடப்பட்டால், அவர்கள் இந்த நிறுவனங்களை, அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சியின் சித்தாந்தத்துடன் இணைந்த நபர்களால் நிரப்புவார்கள்” என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் முதன்முறையாக அரசியலமைப்பை அபகரித்துள்ளது. நாங்களே நீதிபதிகளை நியமிப்போம் என்றார்கள். இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்று ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறினார். மேலும் உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அடிபணிவதில்லை ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தைப் பார்த்து அடிபணியத் தொடங்குகிறார்கள் என்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை மேற்கோள் காட்டி பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘ஒரு நீதிபதியின் குரல்.. இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகு அதன் வெற்றி. மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தங்களை ஆட்சி செய்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் மற்றும் சட்டங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நமது நீதித்துறை சுதந்திரமானது, நமது அரசியலமைப்பு மிக உயர்ந்தது

மோடி, அமித்ஷா யார் வந்தாலும் வெற்றி எங்களுக்கு தான்; சித்தராமையா உறுதி.!

உண்மையில், பெரும்பாலான மக்கள் ஒரே மாதிரியான விவேகமான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளையும், மக்களின் ஆணையையும் புறக்கணிப்பவர்கள் மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்’’ என உச்சநீதிமன்றத்தை சூசகமாக தாக்கி பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.