மகாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரி பதவி விலக விருப்பம்

மும்பை: சத்ரபதி சிவாஜி குறித்து மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கவர்னர் பதவியில் இருந்து விலகுவதற்கு பகத்சிங் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\” கடந்த 19ம் தேதி  மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடியிடம் கவர்னர் பதவியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்தேன். எனது அனைத்து அரசியல் பொறுப்புக்களில் இருந்தும் விடுபட்டு எனது வாழ்நாள் முழுவதும் புத்தகம் வாசிப்பது , எழுதுவது மற்றும் இதர செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு விரும்புகிறேன். நான் எப்போதும் பிரதமரிடம் இருந்து அன்பையும், நேசத்தையும் பெற்றுள்ளேன். இந்த விஷயத்திலும் நான் அதை பெறுவேன் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.